முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை நீடிப்பு: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் மணிமுத்தாறு அருவியில் செவ்வாய்க்கிழமை 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நிகழாண்டில் கோடையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மழையால் அக்னிநட்சத்திரம் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டுள்ளனர்.செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 10 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 4 மி.மீ மழையும், நான்குனேரியில் 2 மி.மீ மழையும், செங்கோட்டையில் 5.1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நண்பகலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் மழை பெய்தது.

நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அணைகளுக்கு நீர்வரத்து இருந்ததால் மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,779 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 422 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 26 கனஅடியும், ராமநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 10 கனஅடியும், வடக்குப்பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 105 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 73.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 87.86 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.85 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 56.90 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 44.62 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 15.74 அடியாகவும்,வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 24 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.99 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 3.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 305 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்திற்கு 75 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →