முகப்பு
தற்போதைய செய்திகள்

நெய்வேலி அருகே பெண் மர்ம சாவு: போலீஸார் விசாரணை

நெய்வேலி வட்டம் 3 இல் வசிக்கும், மும்தாஜ் என்பவரது வீட்டில் இருந்து இன்று காலை 11 மணியளவில் புகை வெளினாதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

நெய்வேலி வட்டம் 3 இல் வசிக்கும், மும்தாஜ் என்பவரது வீட்டில் இருந்து இன்று காலை 11 மணியளவில் புகை வெளினாதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு புகார் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சென்று பார்த்த போது மும்தாஜ் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்வ இடத்துக்கு வந்து விசாரணை மோற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது மர்ம நபர் யாரோ ஒருவர் வந்து சென்றுள்ளார். அநேகமாக நகைகளை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மும்தாஜின் கணவர் நெய்வேலி அனல் மின்நிலையம் 2இல் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் முகமது ரசீப், முகமது ரசீத், ஆகிய இருவரும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜா, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →