முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதி தந்தை மகன் சாவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் உயிரிழந்தனர்.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதி தந்தை மகன் சாவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் உயிரிழந்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் உயிரிழந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள செம்பட்டையான்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (53). விவசாயக் கூலி. இவரது மகன் பிரதீப்ராஜ் (22). இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வந்தார்.

பிரதீப்ராஜ் இரு சக்கர வாகனத்தில் தனது தந்தையை பின்னால் அமர வைத்து கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். எதிரே கார் ஒன்று ராஜபாளையத்திலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. மாவட்ட துப்பாக்கி சுடும் மைதானம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, காரின் பின் பக்க டயர் வெடித்து கார் தாறுமாறாக ஓடி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பிரதீப்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமுற்ற ராமர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த காங்கேயத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →