முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

இந்திய கடலோரக் காவல்படையினர் கடலில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகை மாவட்ட கடல் எல்லையில், நாகைக்கு தென்கிழக்கே 30 கடல் மைல் தூரத்தில் ஒரு பைபர் படகு சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டு, அதனருகே காவல்படையினர் சென்றனர். அப்போது அது இலங்கையை சேர்ந்த பைபர் எனவும், அதில் இருந்த 5 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்த படகில் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கிங்க்ஸ்லீ, சுஜித் பியாந்தே, மகாதேவ், இஜாவ் மகேஷ்குமார், லியோரே ரமேஷ் என்பதும், கடந்த 22-ம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து மீன்பிடிக்க புறப்பட்டதும்  விசாரணையில் தெரியவந்தது. இந்த 5 பேரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய பைபர் படகை பறிமுதல் செய்தனர். இவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு அழைத்துவந்தனர். துறைமுகத்தில் வைத்து மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, இவர்களை நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →