பேருந்து படியில் பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு
விருதுநகரில் பேருந்தில் படியில் பயணம் செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்பேருந்து படியில் பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு
விருதுநகரில் பேருந்தில் படியில் பயணம் செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்
விருதுநகர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (25). இவரது கணவர் கருப்பசாமி. அக்டோபர் 25-ம் தேதி இரவு கருப்பசாமி, விருதுநகரிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்துள்ளார்.
அழகாபுரி சாலை, பாவாலி விலக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, படியிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமுற்ற கருப்பசாமி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.
ஆமத்தூர் காவல் நிலையத்தில் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், பேருந்து ஓட்டுநர் சாத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (56) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.