முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் பலத்த காற்று: மின்சாரம் துண்டிப்பு

சென்னைக்கு தென் கிழக்கே வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழ்வுநிலை சென்னைக்கும் காரைக்காலும் இடையே நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

சென்னைக்கு தென் கிழக்கே வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழ்வுநிலை சென்னைக்கும் காரைக்காலும் இடையே நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. காரைக்காலில் பலத்த காற்று வீசி ஆங்காங்கே மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது.

இதற்கிடையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் வாய்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலின் பாதிப்பை போல இது பெரும் சேதத்தை ஏற்படுத்துமே என அஞ்சப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →