நெய்வேலியில் கனமழை: மின் உற்பத்தி பாதிப்பு
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெய்வேலியில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் நெய்வேலியில் அதிகபட்சமாக 45 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
நெய்வேலி நகரம் முழுவதும் வெள்ள நீர் பெருக்கடுத்துள்ளது. சுரங்கம் 1, சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 2 ஆகியவற்றில் மழை நீர் புகுந்ததால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டது. 2 நாட்கள் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை.
இந்நிலையில் நெய்வேலியில் மின் உறப்த்தி ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.