மாணவர் தரம் உயர ஆசிரியர் தரம் உயர வேண்டும்
மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.
தற்போதைய செய்திகள்மாணவர் தரம் உயர ஆசிரியர் தரம் உயர வேண்டும்
மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.
மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்கள் தரம் உயர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர்களுக்கான 7 நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி, கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், இயக்குநர் டாக்டர் சசி ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது.
முதல்வர் சுப்புராஜ் வரவேற்றார். பல்கலைக்கழக கணினித் துறைத் தலைவர் தீபலட்சுமி கருத்துரையாற்றினார்.
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பயிற்சி மைய இயக்குநர் டாக்டர் மோகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள் வகுப்பறையை விருப்பமுடன், ஆர்வமுடன் கவனிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் வகுப்பிற்கு தகுந்த பயிற்சியுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும்போது எந்த கர்வமும் கொள்ளக் கூடாது. மாணவர்கள் வகுப்பை விருப்பத்துடன் அனுபவிக்கும் விதத்தில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் திட்டமிட்டு பயிற்சியுடன் வகுப்பறைக்குச் சென்றால்தான், சிறந்த கல்வித் தரத்தைத் தர இயலும் என்றார் அவர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிருந்தா, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.