முகப்பு
தற்போதைய செய்திகள்

மாநில கிராம செவிலியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 27 செப்டம்பர், 2015 at 2:51 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் ஹாஜிபி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநில கிராம செவிலியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில தலைவர் ப.நிர்மலா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அந்தோனியம்மாள், வே.ரூபசௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரம் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மூடப்பட்ட துணை சுகாதார செவிலியர் பயிற்சி மையங்களை திறக்க வேண்டும். மாவட்ட தாய் சேய் நல அலுவலர்களை தேர்வு மூலம் செய்யாமல், மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

கிராம செவிலியர்களுக்கு 3 கட்டங்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவில் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.