முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயிலில் அடிபட்டு பூ விற்பனை செய்யும் பெண் சாவு

சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு பூ விற்பனை செய்யும் பெண் ஒருவர் இறந்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு பூ விற்பனை செய்யும் பெண் ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டைச் சேர்ந்த மணிவேல் மனைவி புஷ்பா (35). இவர் சிதம்பரம் கடலூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் பூ விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை அப்பகுதி வழியே ரோந்து வந்த போலீஸாரை கண்டு பூ விற்பனை செய்த பெண்கள் ஓடினர். அச்சமயம் ரயில்வே கேட்டை கடந்த பெங்களூர் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புஷ்பா அடிபட்டு இறந்து போனார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.