முகப்பு
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: இரு போலீஸார் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரது ஊனமுற்ற தாயை மானபங்கம்

தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: இரு போலீஸார் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரது ஊனமுற்ற தாயை மானபங்கம்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவரைத் தாக்கி, அவரது ஊனமுற்ற தாயை மானபங்கம் செய்ததாக இரு போலீஸார் உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மனைவி ஆரோக்கியமேரி (45). விபத்தில் பாதிக்கப்பட்டு, இடது கையை இவர் இழந்துவிட்டார். இவரது மகன் பரலோகராஜா. கல்லூரி மாணவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர் ச.முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருபவர் செல்லத்துரை, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருபவர் பூபதிராஜா, தொம்பக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சேகர் (எ) சந்திரசேகர். 

பரலோகராஜா நல்லகுற்றாலபுரம் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்னையில் வியாழக்கிழமை வழக்குரைஞர் முருகேசன், காவலர்கள் செல்லத்துரை, பூபதிராஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பரலோகராஜாவின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் கம்பால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.

தடுக்க முயன்ற தாய் ஆரோக்கியமேரியை வீட்டிலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அவரை மானபங்கம் செய்தார்களாம். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்களாம்.

இது குறித்து ஆரோக்கியமேரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் சார்பு ஆய்வாளர் ஆர்.கீதா வழக்குரைஞர் முருகேசன், காவலர்கள் செல்லத்துரை, பூபதிராஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இவர்களைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →