ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் ஆறாவது ஆண்டாக ஆசியாவின் இதயம் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான ஆசியாவின் இதயம் மாநாடு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் நேற்று சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபறும் இந்த மாநாட்டில் ரஷியா, சீனா, துருக்கி உள்பட சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதர நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பிரதிநிதிகள் கூட்டம் நேற்று முடிவடைந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று முக்கிய அமைச்சரவை மாநாடு நடைபெறுகிறது. இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் தொடங்கி வைத்தனர்.
பின்னர் இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை விரிவு படுத்துவது குறித்து பேசினர். மேலும் இம்மாநாட்டில் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாகவும், பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.