தற்போதைய செய்திகள்

சியோலில் பொக்லைன் வாகனத்துடன் நாடாளுமன்றத்துக்குள் செல்ல முயன்றவர்கள் கைது

DIN

தென்கொரியாவில் பெண் அதிபர் பார்க் ஜியூன் ஹை பதவி விலக வலியுறுத்தி, நாடாளுமன்றம் அருகே ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.

அதிபரின் நெருங்கிய நண்பரான சோயி சூன் சில் அதிபரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டார்.

இதற்கு பொறுப்பேற்று, அதிபர் பார்க் ஜியூன் ஹை பதவி விலக வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில், தலைநகர் சீயோலில் திரண்ட ஏராளமானோர், பொக்லைன் வாகனத்துடன் நாடாளுமன்றத்துக்குள் செல்ல முயன்றனர். இதைத் தடுத்த போலீசார், அவர்களை கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT