முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்த காரணத்தால் பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. தற்போதைய அணைகளின் நீர்இருப்பை கொண்டு அடுத்த 40 தினங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே 2 நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை, சேர்வலாறு அணைப் பகுதியில் தலா 1 மி.மீ, சேர்வலாறு அணையில் 2 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 1.2 மி.மீ, தென்காசியில் 1.6 மி.மீ, ஆலங்குளத்தில் 2.6 மி.மீ, சிவகிரியில் 1 மி.மீ மழையும் பதிவாகியிருந்தன.

நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 22.45 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 60.24 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 36.45 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 39.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.29 அடி, 

குண்டாறு அணையின் நீர்மட்டம் 22.62 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 71.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.74 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 8 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 103 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 17 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 204.75 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை: இந்நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சுத்தமல்லி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்பட இம்மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →