முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே சாலை விபத்து: 4 பேர் பலி

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர்  உயிரிழந்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர்  உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் புலிக்கோட்டை சேர்ந்தவர்கள் திருநள்ளாருக்கு சுற்றுலா செல்லும்போது திருவண்ணாமலை அருகே உள்ள சு.வாழவெட்டி அருகே பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் முருகன், முனியன், நாகராஜ் உட்பட சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரழந்தனர்.

இந்த விபத்தில் 25 பேர் காயம் அடைந்தார்கள். காயமடைந்தவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.