திருவண்ணாமலை அருகே சாலை விபத்து: 4 பேர் பலி
திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் புலிக்கோட்டை சேர்ந்தவர்கள் திருநள்ளாருக்கு சுற்றுலா செல்லும்போது திருவண்ணாமலை அருகே உள்ள சு.வாழவெட்டி அருகே பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் முருகன், முனியன், நாகராஜ் உட்பட சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரழந்தனர்.
இந்த விபத்தில் 25 பேர் காயம் அடைந்தார்கள். காயமடைந்தவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.