தேமுதிகவில் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு
கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை நியமிóத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை நியமிóத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
தேமுதிக கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர்களாக காட்டன் ஆர்.செந்தில் எஸ்.எம்.பி.முருகனும், கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக ஆர்.பரமசிவம், கே.தியாகராஜனும் நியமிக்கப்படுகின்றனர்.
மாவட்ட, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தேமுதிகவில் இருந்து பலர் விலகி, திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் காரணமாக கோவைக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக இரண்டு பேரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.