பாம்பனில் கடல் உள்வாங்கியது: நாட்டுப் படகு மீனவர்கள் தவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் நாட்டுப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவித்தனர்.
பாம்பன் பகுதியிலுள்ள சின்னப்பாலம் கடலோரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறிய நாட்டுப்படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தபிறகு படகுகளை கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருப்பார்கள்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சின்னப்பாலம் தென் கடல் திடீரென கரையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவுக்கு உள்வாங்கியது. இதனால் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் தரைதட்டி சாய்ந்த நிலையில் நின்றன.
இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் முடியாமல் தவித்தனர்.