முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்டாக் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பாதிப்பு

Updated On : 1 ஆகஸ்ட், 2017 at 7:08 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:04 PM

புதுச்சேரி:

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 95 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதவது:

Advertisement

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர்க்கப்பட்ட 95 மாணவ, மாணவியரை விடுவிக்க எம்சிஐ உத்தரவிட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட 40-க்கு மேற்பட்ட மாணவர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதில் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 12 மாணவர்கள், இடங்களை மாற்றிக் கொண்ட 6 மாணவர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 31 பேரும் அடங்குவர். மொத்தம் 49 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்துக் கொண்டு நாளை தில்லிக்கு
சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், எம்சிஐ தலைவரிடம் அளிக்க உளளேன். அவர்களின் சேர்க்கை, கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும்.

புதுச்சேரியில் நீட் தகுதி அடிப்படையில் தான் மருத்துவக் கலந்தாய்வு முற்றிலும் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும் நாளிலேயே அல்லது அதற்கு பின்னரோ புதுச்சேரியில் கலந்தாய்வு நடைபெறும் என்றார் மல்லாடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.