செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
அதேபோல் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சோழிங்கநல்லூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வண்டலூர், வாலாஜாபாத், மதுராந்தகம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.