முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தில்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காததால், அங்கிருந்து மகாராஷ்டிரா சென்றார்.
அங்கு இன்று காலை ஷீரடி சாய்பாபா கோயில், சனீஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஓபிஎஸ்.,சை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நாளை (ஆக.,14) காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை ஓ. பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார். இதற்காக அவர் மீண்டும் தில்லி செல்கிறார்.