ஸ்ரீநகர்: காஷ்மீரில் கன மழை மற்றும் கடும் பனிப் பொழிவு காரணமாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோஃபியான் மாவட்டத்துடன் பூஞ்ச் மற்றும் ரஜெளரி மாவட்டங்களை இணைக்கும் முகலாயர் சாலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக இரண்டாவது நாளாக மூடப்பட்டது.
இதற்கிடையே கடும் பனிப் பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.