தற்போதைய செய்திகள்

காவலர் பணியிடத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5

சா. ஜெயப்பிரகாஷ்

தருமபுரி: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 சதவிகித பணி இடங்களுக்கு தருமபுரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 5 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, 45 வயதுக்குள்பட்ட, பணியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையத்தில் கிடைக்கும் விண்ணப்பங்களை வாங்கி நிரப்பி, உரிய சான்றுகளுடன் வரும் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தருமபுரி மாவட்ட நல அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தேர்வுக்கான முன்பயிற்சி வரும் பிப். 13ஆம் தேதி ஒட்டப்பட்டியிலுள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT