தற்போதைய செய்திகள்

80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி: சுகாதார இயக்குநர்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் சார்பில் தட்டம்மை, ருபல்லா நோய்த் தடுப்பூசி போடும் திட்டத்தை கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், லட்சத் தீவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தட்டம்மை, ருபல்லா நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளை பாதுகாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவையில் பிப்ரவர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 3.1 லட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி கடந்த 6-ம் தேதி தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடும் பணியை சுகாதார அமைச்சர் மல்லாடி தொடங்கி வைத்தார். தடுப்பூசி போடப்பட்டதால் ஏறக்குறைய 10-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 7-ம் தேதி வரை 2 நாள்களில் மொத்தம் 60 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் இடையில் சில நாள்கள் நாடாப்புழு மருந்து வழங்கப்பட்டதால் தட்டம்மை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சுகாதார இயக்குநர் டாக்டர் ராமன் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்நிலையில் மீண்டும் அப்பணி தொடங்கப்பட்டு இதுவரை புதுவை மாநிலம் முழுவதும் 80000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எந்த பின்விளைவு அல்லது பக்க விளைவுகளோ ஏற்படவில்லை. வெற்றிகரமாக அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ஒருமுறை தட்டம்மை தடுப்பூசி போட்டிருந்தாலும் தற்போதும் போடலாம். சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள், பெற்றோர் நம்பத் தேவையில்லை. அதை பரப்புவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரிமா சங்கமும் இணைந்துள்ளது.

ஒரு வார காலம் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வேன் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தொடர் இருமல், சளி பாதிப்பு, காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT