தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி மனைவியை குத்திக் கொன்ற கணவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கர்ப்பிணி மனைவியை குத்திக் கொன்ற கணவரை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் மனைவி நாகம்மாள் (32). இவருக்கும், அரியலூர் மாவட்டம், நாயகனைப்பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன் (29) என்பவருக்கும், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாகம்மாள் கணவரை பிரிந்து, மணிகண்டனுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த நாகம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் இடையே புதன்கிழமை காலை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வேறு ஒருவருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவரே தந்தை என்றும் நாகம்மாள் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் நாகம்மாளை குத்தி கொலை செய்துவிட்டு,  தா.பழூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அந்த வழக்கில், போலீஸர் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT