தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில்  4வது நாளாக செல்போன் வெளிச்சத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரினாவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக செல்கின்றனர்.

ஆயிக்கணக்கான இளைஞர்கள் வருவதால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் செல்போன் வெளிச்சத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 4வது நாளாக மெரினாவில் செல்போன் வெளிச்சத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மெரினாவில் திரண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் பகல் பொழுதில் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அதேபோன்று, சிறிதும் உற்சாகம் குறையாமல், இரவு நேரத்திலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இருள் சூழ்ந்தாலும் கவலைப்படாமல், செல்ஃபோன் ஃப்ளாஷ் மற்றும் மொபைல் டார்ச் லைட்டுகளை எரியவிட்டபடி, இளைஞர்கள் தங்களது போராட்டத்தை நடத்துவது வழக்கமாக உள்ளது.

அந்த வெளிச்சத்திலேயே, இரவு உணவு முடித்து, கடற்கரையிலேயே படுத்து உறங்கும் இளைஞர்கள், தங்களுடன் உள்ள பெண்களுக்குப் போதிய பாதுகாப்பும் வழங்கி, கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இன்று 4வது நாளாக, இருட்டிய பிறகும், விண்ணை நோக்கி, டார்ச் அடித்தபடி, தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ள இளைஞர்கள், கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT