முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜல்லிகட்டு போட்டி: மேலும் ஒருவர் உயிரிழப்பு

விராலிமலை, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:48 AM
பகிர்:

விராலிமலை, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

விராலிமலை அருகேயுள்ள ராப்பூசலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது, இதில் அப்பகுதியைச் சேர்ந்த 168 காளைகள் பங்கேற்று துள்ளி குதித்து ஓடியது.

இதில் காளைகளை அடக்க முயன்ற ஒடுக்குர் ராஜா மற்றும் லட்சுமணப்பட்டி மோகன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்து ஏற்கனவே உயிரிழந்த நிலையில், திருச்சி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாங்குடியைச் சேர்ந்த க. கருப்பையா(30) சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.இதனால் ஜல்லிக்கட்டு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.