புதுச்சேரி: பாஜக மாநில தலைவர் போல் ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார் என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் புதன்கிழமை காலை பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியது:-
மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய கடிதத்தை கடந்த 1}ம் தேதி மத்திய அரசு குறிப்பிட்டு தலைமைச் செயலகத்திற்கு அனுப்பியிருந்தது. அந்த கடிதம் 3}ம் தேதி கிடைக்கப்பெற்றது. ஆனால் அக்கடிதத்தில் நியமன உறுப்பினர்களின் தகப்பனார் பெயர் மற்றும் முகவரி இல்லை.
இதனையடுத்து சட்டப்பேரவைத் தலைவருக்கு அக்கடிதத்தை தலைமைச் செயலர் அனுப்பி பரிசீலனை செய்ய கோரியிருந்தது. இதனிடையே அந்த 3 பேருக்கும் நியமன ஆணையை வழங்கியதாக தெரிவித்தார்.
அவர்கள் அதை வைத்திலிங்கத்திடம் கொடுத்தபோது அரசிதழில் வெளிவந்தவுடன் பதவி ஏற்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்ததார்.
ஆனால், அரசிதழில் வெளிவந்தவுடன் அவர்களை ரகசியமாக அழைத்து ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதற்கு பத்திரிக்கையாளர்களை கூட அனுமதிக்கப்படவில்லை.
நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுள்ள சாமிநாதன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தவர். மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்த அவர்களை நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமித்திருப்பது நியாயமல்லை. சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. கிரிமினல் வழக்கு உள்ளவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாமா எனத் தெரியவில்லை.
மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாமா என்பதும் தெரியவில்லை. மேலும் நான் பல முறை தில்லி சென்று கிரண்பேடி விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் என புகார் கூறியிருந்தேன். ஆனால் இப்போது மத்திய அரசே விதிமுறைகளை மீறி செயல்படுகிறது என்றார் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.