முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆக.15 முதல் புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவை தொடக்கம்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் புதுச்சேரி ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்குகிறது.

Updated On : 12 ஜூலை, 2017 at 10:21 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 9:55 PM

புதுச்சேரி : வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் புதுச்சேரி ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்பட்டது. 48 இருக்கைகள் கொண்ட சிறிய ரகவிமானம் இயக்கப்பட்டது. விமானம் முழுமையாக நிரம்பாத நிலையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இத்தொகை சரிவர வழங்கப்படாததாலும், பல்வேறு பிரச்னைகளாலும் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு சிறிய விமான நிலையங்களை இயக்கத்துக்கு கொண்டு வரும் வகையில் உடான் திட்டத்தை தொடங்கியுள்ளது. 500 கி.மீ தூரமுள்ள நகரங்களுக்கு விமானத்தில் செல்ல ரூ.2500 மட்டுமே கட்டமமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதுச்சேரியில் இருந்து சேலம் வழியாக பெங்களுரூவுக்கும், ஐதராபாத், திருப்பதி, கோவைக்கும் விமான சேவையை தொடங்குவது குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி, தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சருடன் பேச்சு நடத்தினர். இதற்கிடையே புதுச்சேரி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல், விமான நிலையங்கள் ஆணையம், ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஜூலை 1-ம் தேதி முதல் புதுவை-ஐதராபாத் இடையே விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

ஆனால் விமான சேவையை இயக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை 3 முதல் 6 மாதங்களுக்கு அரசு வழங்குவது தொடர்பான திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நிதி செலவின விதிமுறைகள், மத்திய கண்காணிப்பு ஆணைய வழிகாட்டுதல்களை காண்பித்து அனுமதி தரவில்லை. விமான சேவை தொடங்குவதற்கு ஏற்படும் தாமதம் குறித்து தலைமைச் செயலாளர் பரிதா, மத்திய அரசுக்கு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழித்தடங்களில் விமான சேவையை இயக்குவதற்கான இரண்டாவது சுற்று ஏலம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகவும், தலைமைச் செயலர் பரிஜா பேச்சுவார்த்தை நடத்தியதாலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்க ஒப்புக் கொண்டது.

புதுவை அரசு இலவச குடிநீர், மின்சாரம், பாதுகாப்பு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. நாள்தோறும் புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானங்கள் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆகும். புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் செல்ல சென்னைக்கு சாலை மார்க்கமாக செல்லவேண்டும். மேலும் ரயில் மூலம் செல்ல வேண்டும். இனிமேல் நேரடியாக விமானத்தில் ஐதராபாத் பயணிக்கலாம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.