தற்போதைய செய்திகள்

பாடப் புத்தகங்களில் இருந்து ரவீந்திரநாத் தாகூரை நீக்க அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை: பிரகாஷ் ஜாவடேகர்

DIN

புதுதில்லி:  பாடப் புத்தகங்களில் இருந்து ரவீந்திரநாத் தாகூரை நீக்க அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் அவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்த அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் சுதந்திரம் மற்றும் இலக்கியத்திற்காக பங்களிப்பு கொடுத்த  தாகூர் மற்றும் பிற தலைவர்களுக்கும் அரசு மதிப்பளிக்கிறது.

பாடப் புத்தங்களில் ஏதேனும் திருத்தம் மற்றும் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்திற்கு ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

அவரின் பதிலுக்குப் பின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் ஜவடேகர் இருக்கைக்கு சென்று மூன்று தாகூர் புத்தகங்களை பரிசாக கொடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT