தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
திருவிழாவி்ன முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.