தற்போதைய செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் விரைவில் கட்டாய திருமணப் பதிவு சட்டம் கொண்டு வரப்படும்: ரீட்டா பகுகுணா ஜோஷி 

உத்தரப் பிரதேசத்தில் திருமணப் பதிவு சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான மசோதா விரைவில் மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும்

DIN

உத்தரப் பிரதேசத்தில் திருமணப் பதிவு சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான மசோதா விரைவில் மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று உத்தரப் பிரதேச பெண்கள் நலத்துறை அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, திருமணப் பதிவு நாடுமுழுமைக்கும் அவசியமான ஒன்று. இதை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால் முந்தைய அரசு இதுகுறித்த நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று கூறினர்.

மேலும் பல நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் நடப்பதாக கூறப்பட்டு வந்த போதும் சமாஜ்வாதி அரசு திருமணப்பதிவு சட்டத்தை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது நாங்கள் அதை தடுக்கும் முயற்சியாகத்தான் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டுவர உள்ளோம் இதுகுறித்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என்று  தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT