முகப்பு
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு கேட்டு ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் மனு

ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு கேட்டு ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் மனு

ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இத்தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனும், திமுக சார்பில் ஆர்.கே. நகர் கிழக்குப் பகுதி செயலாளர் என். மருது கணேஷும், எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை சார்பாக அதன் தலைவர் தீபாவும், தேமுதிக சார்பில் அக்கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணனும், அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான 76 வயதான இ. மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே நகரில் போட்டியிடும் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மனுவில் ஆர்கே நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் எனவே, தேர்தல் முடியும் வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →