முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் சாவு

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:25 PM
பகிர்:

விராலிமலை:  விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழந்தனர். மேலும் 4  பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோயிலைச் சேர்ந்தவர் திருநாவுகரசு இவரது மனைவி ராஜேஸ்வரி மகன் சித்தார்த் மற்றும் உறவினர்கள் நெடுஞ்செழியன், தென்னவன், மணிமேகலை ஆகிய 6 பேரும் ஒரு காரில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு விராலிமலை வழியாக சென்று கொண்டிருந்தனர் காரை திருநாவுகரசு ஓட்டியுள்ளார்.

விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலை விராலூர் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் மணிமேகலை, சித்தார்த் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மற்ற நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.