சென்னை: தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த போது கூறியதாவது: -
தமிழக மக்களின் தேவைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் இரு அணிகள் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
பதவியில் இருப்பவர்கள் மட்டும்தான் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லை எனவும் ஓபிஎஸ் கூறினார்.