வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது: தமிழிசை செளந்தரராஜன்
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சென்னை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சசிகலாவின்
சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சென்னை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபாட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், மத்திய அரசை விமர்சிப்பதால் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை. முதலீடு மீதான புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்படுகிறது.
மடியில் கனம் இல்லாவிட்டால் எதற்காக பயப்பட வேண்டும். வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார்.