தற்போதைய செய்திகள்

சசிகலாவின் பரோல் மனு நிராகரிப்பு: புகழேந்தி மறுப்பு

DIN

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து சசிகலாவுக்கு பரோல் வழங்கினால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியுமா என கேட்டு கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மெஜ்ரிக், சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பரோல் பெறுவதற்கு சமர்ப்பித்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூடுதல் தகவல்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய கர்நாடக சிறைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் சசிகலா பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தினகரன் ஆதரவாளர்  புகழேந்தி  தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT