தில்லியில் நாளை மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை நடைபெற உள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாடு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும், அமைச்சகத்தின் உயர்நிலை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
பெருநிறுவன நிர்வாகம், மனிதவள நிர்வாகம், நிதிநிலைச் சீரமைப்பு, புதிய கண்டுபிடிப்பு போன்ற விஷயங்களில் கருத்து நிலை அறிக்கைகள் பிற்பகலில் பிரதமருக்கு வழங்கப்பட உள்ளது. . இதைத் தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் உரையாற்றுவார்.
Advertisement