முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:  தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:30 pm IST
பகிர்:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அதில் இன்று மாலை சிபிசிஐடி ஏடிஜிபி-யாக அம்ரேஸ் புஜாரியும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபி-யாக ஜெயந்த் முரளியும், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக மஞ்சுநாதா, சென்னை குற்றப் பிரிவு ஏடிஜிபியாக அபாஸ்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் விஜயகுமாரி, சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பதவி உயர்வு செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.