தற்போதைய செய்திகள்

மாயாவதி ஆட்சியில் குண்டு வெடிப்பு: 'மறுபிறப்பு' தினமாக கொண்டாடிய பாஜக அமைச்சர்

ANI


அலகாபாத்: உத்தரபிரதேசத்தில் அப்போதைய முதல்வர் மாயாவதி ஆட்சி காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு விபத்தில் தான் உயிர் பிழைத்த தினத்தை ‘மறுபிறப்பு’ எடுத்த தினமாக கொண்டாடி வருகிறார் உத்தரபிரதேச அமைச்சர் நந்த் கோபால் குப்தா.

பொதுவாக தங்கள் பிறந்த தினத்தை கோலகலாமாக கொண்டாடி வரும் மக்களுக்கு மத்தியில், உத்தரபிரதேச மாநிலம் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தான் காப்பற்றப்பட்ட தினத்தை ‘மறுபிறப்பு’ தினமாக பூஜை செய்து கொண்டாடி வருகிறார்.

முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கிக்கொண்டு பாதுகாப்பாக உயிர்பிழைத்த தினத்தை, தற்போதைய பாஜக அமைச்சர் நந்த் கோபால் குப்தா "மறுபிறப்பு" எடுத்த தினமாக பூஜை செய்து கொண்டாடினார். 

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரத்தில் நேற்று வியாழக்கிழை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

அலகாபாத் நகரத்தில் கொண்டாடப்பட்டு வரும் நந்த் கோபால் மறுபிறப்பு தின நிகழ்ச்சியின் போது எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக பஹதூர்கான்ஜ் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT