ஏர்செல் சேவை முடங்கியது
ஏர்செல் மொபைல் போன் சேவையில் இன்று முதல் பாதிப்பு இருக்கும் என, அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர், சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஏர்செல் மொபைல் போன் சேவையில் இன்று முதல் பாதிப்பு இருக்கும் என, அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர், சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
ஏர்செல்லில் மட்டும் ஆன்லைன் பரிவர்த்தணைக்கான வசதிகள் வைத்திருப்போர் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல் நிறுவனத்திற்கும் இடையிலான நிதிப் பிரச்னையில் டவரை நிர்வகிக்கும் நிறுவனம் சிக்னலை நிறுத்தியதால், ஏர்செல் இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் கடந்த வாரம் நேற்று முதல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இயங்கி வந்த, குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புகளும், இன்று முதல் பாதிக்கப்படும் என்றார் ஏர்செல் தென் மாநில தலைவர்.