தற்போதைய செய்திகள்

கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: இலங்கை விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்து

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட இலங்கை விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

DIN

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட இலங்கை விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக 227 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். 

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.

இதனையடுத்து, உடனடியாக விமானத்தை விமானத்தை நிறுத்தியதால் 227 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக 
உயிர்தப்பினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, நிலைமை சீர் செய்யப்பட்டதும் ஓடுதளம் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT