தற்போதைய செய்திகள்

கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: இலங்கை விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்து

DIN

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட இலங்கை விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக 227 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். 

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.

இதனையடுத்து, உடனடியாக விமானத்தை விமானத்தை நிறுத்தியதால் 227 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக 
உயிர்தப்பினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, நிலைமை சீர் செய்யப்பட்டதும் ஓடுதளம் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT