விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வேம்பேடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த சிறப்பு காவல்படை தலைமைக் காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சேர்ந்த சிறப்பு காவல்படை தலைமைக் காவலரான நீலமேக அமரனை, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பள்ளி சுங்கச்சாவடி அருகே காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சாலையில் ஓட ஓட விரட்டி சென்று கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளது. கொலை குறித்து அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.