தற்போதைய செய்திகள்

குருவித்துறை பெருமாள் கோயிலில் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு

DIN

திண்டுக்கல்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.

சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கருவறை கதவை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். பழமை வாய்ந்த இக்கோயிலில் சிலைகளை திருடியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உதவியாக தொழில்நுட்பக்குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, சிலைகள் திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் இன்று செவ்வாய்க்கிழமை குருவித்துறை கோயிலுக்கு வருகை தந்து, அங்கு சிலைகள் திருடப்பட்ட கருவறை, கோயில் வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்துகிறார். மேலும் சிலைகளை திருடியவர்கள் விட்டுச்சென்ற தடயங்களையும் பார்வையிட உள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி என்ற இடத்தில் அந்த 4 ஐம்பொன் சிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சாலையோரம் வீசப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT