தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து

DIN


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஏழாயிரம் பண்ணை அருகே ஆண்டியாபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆண்டியாபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை திடீரென இடி, மின்னல் ஏற்பட்டுள்ளது. இதில், பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அறை முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

தொழிலாளர்கள் அனைவரும் பாதுப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT