தற்போதைய செய்திகள்

பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவருக்கு செவிலியர்கள் தர்ம அடி!

DIN


பாட்னா: பிகார் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த மருத்துவருக்கு செவிலியர்கள் தர்ம அடி கொடுத்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகி வைரலாகி வருகிறது. 

பிகார் மாநிலம் கதிகார் நகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், பெண் செவிலியர்களுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆவேசம் அடைந்த செவிலியர்கள் அனைவரும் மருத்துவரின் அறையின் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து மருத்துவரை கடுமையாக தாக்கினர். அப்போது, ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சிலர் தங்களது காலணிகளைக் கொண்டும் தாக்கினர். அங்கிருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், பணியின்போது செவிலியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் மருத்துவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT