தற்போதைய செய்திகள்

காஷ்மீர் பந்திபூராவில் கடும் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN


பந்திபூரா: ஜம்மு-காஷ்மீர் பந்திபூராவில் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபூராவில் எல்லைப் பகுதியின் சுக்பாபா எனும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்ற ஒருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த அடையாளங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT