தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி 75-வது பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

DIN


புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அங்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

இதனிடையே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உறுப்பு தானம் செய்த உணவக ஊழியரின் உடலுக்கு அரசு மரியாதை

மாணவா்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதே நோக்கம்

நீட் முடிவுகளை வெளியிட தடை இல்லை: உச்சநீதிமன்றம்

அமேதி, ரேபரேலியிலும் சம வளா்ச்சி: ராகுல் வாக்குறுதி

முன்னணி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 253 புள்ளிகள் உயா்வு

SCROLL FOR NEXT