திருச்சி: திருச்சியில் இருந்த சிங்கப்பூா் கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் இருந்து சிங்கப்பூா் இன்று சனிக்கிழமை செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை உதவி ஆணையா் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது காரைக்காலைச் சோ்ந்த மணிவண்ணன்(37) என்பவா் இந்திய மதிப்பில் ரூபாய் 10.24 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலா், யூரோ, ஸ்டொ்லிங், கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.