தற்போதைய செய்திகள்

ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே கவனமாக உள்ளார் பழனிசாமி: ஸ்டாலின் குற்றச்சாட்டு 

DIN


மதுரை: ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே முதல்வர் பழனிசாமி கவனமாக உள்ளார் என திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குசேகரித்தார். 

அப்போது அவர் பேசுகையில், மக்களுக்கு அளித்த உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றி சிறிதும் கவலையில்லாத, சிந்திக்காதவர் பிரதமர் மோடி.

தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக உள்ளவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என குற்றம் சாட்டினார். 

மேலும், எம்.ஜி.ஆருக்கே தலைவராக இருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 6 அடி நிலம் தர மறுத்த அதிமுக அரசுக்கு, தமிழகத்தில் இடம் தரக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT