திருச்சியில் இருந்து 170 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 170 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் நடுவானில் விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணிகள் நடைபெறுவதாகவும், இன்று மாலை மீண்டும் தனது சேவையை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நடுவானில் மின்கோளாறு ஏற்பட்டுதை அறிந்த விமான உடனடியாக விமானத்தை தரையிறக்கம் செய்தால் விமானத்தில் பயணித்த 161 பயணிகள் மற்றும் விமான ஊழியர் என 170 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
Scoot Airways flight makes emergency landing at Chennai airport